Thursday, March 14, 2013

முடியாத கதை

ஏழுமலையும் ஏழுகடலும் தாண்டி
மாயமாய் மறைந்து கிடக்கும் பச்சைத்தீவில்
வானம் தொட்டு உயர்ந்து நிற்கும்
ஆலமரத்தின் அடியில் புதைந்து கிடக்கிறது
ராட்சஷனின் உயிரைத் தாங்கி நிற்கும்
மரகத வீணை
ராஜகுமாரன் அதனைத் தேடி எடுத்து
உடைக்க யத்தனித்தபோது..
எங்கிருந்தோ வந்த அப்பாவின் குரல் கேட்டு
அம்மா காணாமல் போக
அசதியில் தூங்கி போகிறது குழந்தை
இருந்தும்
எப்போது கதை மீண்டும் தொடங்கப்படுகிறதோ
அப்போது தான் கொல்லப்படுவோம்
என்பதை அறியாதவனாக
குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்

(அச்சில் வெளியான முதல் கவிதை. நன்றி - அகநாழிகை சிற்றிதழ்)

No comments:

Post a Comment