Thursday, March 21, 2013

தண்டவாளத் தனிமையில் உருளும் கூழாங்கல்

வெளிர்மஞ்சள் நிற இலைகள்
காத்திருக்கின்றன
சூரியனின் வரவை எதிர்நோக்கி

செடார் மரங்கள் அடர்ந்திருக்கும் மலைச்சரிவில்
சின்னஞ்சிறு செடிகளுக்கு
மழை பொழிய மறுக்கும் மேகங்கள்

விதுரனின் கூழாங்கல்லாய்ச்
சமைந்து நிற்கின்றன
பேசப்படாத வார்த்தைகள்

எப்படிப் பார்த்தாலும்
முதுகினைக் காட்டுவதில்லை
ரசம் போன கண்ணாடிகள்

கைவிடப்பட்ட ரயில் நிலையத்தின்
கடைசி மீதமுள்ள பணியாளன் இவன்

பதில்கள் கிடைக்காதெனத் தெரிந்தும்
தனிமையின் மொழி தொடங்கி
தொலைந்து போகும் நிழல்கள் வரை
துளை வழி கசியும் நீரென
கிளம்பிக் கொண்டே இருக்கும் கேள்விகள்

ஹெம்லாக்கை அருந்தியபின்னும்
காதுகளைத் திறந்தே வைத்திருந்தார்
சாக்ரடீஸ்.

(361 - இதழ் 2)

No comments:

Post a Comment