வெளிர்மஞ்சள் நிற இலைகள்
காத்திருக்கின்றன
சூரியனின் வரவை எதிர்நோக்கி
செடார் மரங்கள் அடர்ந்திருக்கும் மலைச்சரிவில்
சின்னஞ்சிறு செடிகளுக்கு
மழை பொழிய மறுக்கும் மேகங்கள்
விதுரனின் கூழாங்கல்லாய்ச்
சமைந்து நிற்கின்றன
பேசப்படாத வார்த்தைகள்
எப்படிப் பார்த்தாலும்
முதுகினைக் காட்டுவதில்லை
ரசம் போன கண்ணாடிகள்
கைவிடப்பட்ட ரயில் நிலையத்தின்
கடைசி மீதமுள்ள பணியாளன் இவன்
பதில்கள் கிடைக்காதெனத் தெரிந்தும்
தனிமையின் மொழி தொடங்கி
தொலைந்து போகும் நிழல்கள் வரை
துளை வழி கசியும் நீரென
கிளம்பிக் கொண்டே இருக்கும் கேள்விகள்
ஹெம்லாக்கை அருந்தியபின்னும்
காதுகளைத் திறந்தே வைத்திருந்தார்
சாக்ரடீஸ்.
(361 - இதழ் 2)
No comments:
Post a Comment