நெருக்கிப் பின்னிய
வலையொரு கரம்
மின்மினிகள் மிதந்தலையும்
தீபம் மறுகரமென
களம் புகும் தேவகுமாரன் விழிகளில்
மிச்சமில்லை கருணையேதும்
சிறுபிள்ளைத் தொட்டிலென
காற்றுக்குள் இலக்கில்லாது
சென்று மீளும் போர்வாள்
அரூபமாய்த் தீட்டும்
வர்ணமில்லா ஓவியம்
மெல்லியதொரு தீண்டலில்
நிசப்தம் கலைத்து
எழுந்தடங்கும் ஒளிச்சிதறல்கள்
சுற்றிச் சுழன்று துடிதுடித்து
வானேகும் உயிர்
சேனமிடப் படாத
நான்கு புரவிகளில்*
தனக்கானதன் மீதேறிப்
பயணத்தைத் தொடரும் மரணம்
(*விவிலிய நம்பிக்கை)
(வெயில்நதி இதழ் - 3)
வலையொரு கரம்
மின்மினிகள் மிதந்தலையும்
தீபம் மறுகரமென
களம் புகும் தேவகுமாரன் விழிகளில்
மிச்சமில்லை கருணையேதும்
சிறுபிள்ளைத் தொட்டிலென
காற்றுக்குள் இலக்கில்லாது
சென்று மீளும் போர்வாள்
அரூபமாய்த் தீட்டும்
வர்ணமில்லா ஓவியம்
மெல்லியதொரு தீண்டலில்
நிசப்தம் கலைத்து
எழுந்தடங்கும் ஒளிச்சிதறல்கள்
சுற்றிச் சுழன்று துடிதுடித்து
வானேகும் உயிர்
சேனமிடப் படாத
நான்கு புரவிகளில்*
தனக்கானதன் மீதேறிப்
பயணத்தைத் தொடரும் மரணம்
(*விவிலிய நம்பிக்கை)
(வெயில்நதி இதழ் - 3)
No comments:
Post a Comment